கோப்புப்படம் 
உலகம்

பிரிட்டனில் 24 மணி நேரத்தில் 413 பேர் பலி

பிரிட்டனில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக 24 மணி நேரத்தில் 413 பேர் பலியாகியுள்ளனர்.

DIN


பிரிட்டனில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக 24 மணி நேரத்தில் 413 பேர் பலியாகியுள்ளனர்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளான ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக பிரிட்டன் உள்ளது. இந்த நோய்த் தொற்றால் பலியானோர் மற்றும் பாதிக்கப்பட்டோர் பற்றிய சமீபத்திய அறிவிப்பை அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டது.

அதன்படி, 24 மணி நேரத்தில் 4,463 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,52,840 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம், 24 மணி நேரத்தில் அங்கு 413 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 20,732 ஆக உயர்ந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி 24 மணி நேரத்தில் 813 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT