அமெரிக்காவில் கர்ப்பிணி மனைவியைக் கொன்றுவிட்டு இந்தியர் தற்கொலை
அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் வாழ்ந்து வந்த இந்திய தம்பதியில் கர்ப்பிணி மனைவி அவர்களது குடியிருப்பில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். கணவர் ஹாட்சர் நதியில் சடலமாக மீட்கப்பட்டார்.
நியூ ஜெர்ஸி: அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் வாழ்ந்து வந்த இந்திய தம்பதியில் கர்ப்பிணி மனைவி அவர்களது குடியிருப்பில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். கணவர் ஹாட்சன் நதியில் சடலமாக மீட்கப்பட்டார்.
35 வயதான இந்திய பெண்மணி கரிமா கோத்தாரி ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவரைக் கொன்றுவிட்டு, கணவர் மன் மோகன் மால் (37) தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
ஹாட்சன் ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட கணவர் மற்றும் அவர்களது குடியிருப்பில் இருந்து கைப்பற்றப்பட்ட மனைவி என இருவரின் உடல்களும் உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில், அப்பெண்ணின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்துள்ளன.
இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.