உலகம்

அமெரிக்காவில் விமானங்கள் மோதல்: 7 பேர் பலி

DIN


   
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் இரண்டு விமானங்கள் மோதிக்கொண்டதில் 7 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சால்டோட்னா விமான நிலையம் அருகே நடுவானில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்ததைத் தவிர, மற்ற அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தில் விமானத்தை தனியாக ஓட்டிச்சென்ற அலாஸ்கா மாகாண உறுப்பினர் கேரி நோப் உயிரிழந்தார்.
 
மற்றொரு விமானத்தில் ஆறு பயணிகள் இருந்தனர். அவர்களில் சால்டோட்னாவைச் சேர்ந்த பைலட் கிரிகோரி பெல்(57), கன்சாஸைச் சேர்ந்த டேவிட் ரோஜர்ஸ்(40), தென் கரோலினாவைச் சேர்ந்த காலேப் ஹல்சி(26), ஹீதர் ஹல்சி(25), ஓல்ட் மேக்கே ஹல்சி(24) மற்றும் கிர்ஸ்டின் ரைட் (23) என அடையாளம் காணப்பட்டுள்ளது. விபத்து குறித்து இவர்களது குடும்பத்தினருக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தகிக்கும் வெயில்... தற்காக்கத் தேவை விழிப்புணா்வு...

மகாசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கோவில்பட்டியில் மழை வேண்டி ராம நாம ஜெபம்

ஆறுமுகனேரியில் தெய்வீக சத் சங்கக் கூட்டம்

சேரன்மகாதேவி கோயிலில் கொடை விழா

SCROLL FOR NEXT