கரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் குழுவை உருவாக்க உள்ளது: உலகச் சுகாதார அமைப்பு
புதிய ரக கரோனா வைரசின் தோற்றத்தைக் கூட்டாகக் கண்டறியும் வகையில், சீன நிபுணர்கள் உள்ளிட்ட சர்வதேச நிபுணர் குழு ஒன்றை உருவாக்க உள்ளதாக உலகச் சுகாதார அமைப்பு 3ஆம் நாள் தெரிவித்தது.
புதிய ரக கரோனா வைரசின் தோற்றத்தைக் கூட்டாகக் கண்டறியும் வகையில், சீன நிபுணர்கள் உள்ளிட்ட சர்வதேச நிபுணர் குழு ஒன்றை உருவாக்க உள்ளதாக உலகச் சுகாதார அமைப்பு 3ஆம் நாள் தெரிவித்தது.
கரோனா வைரசின் தோற்றம் உள்ளிட்ட பிரச்னைகளைக் கண்டறியும் பொருட்டு சீனாவுக்கு சென்றுள்ள சிறப்புப் பணிக்குழு தனது ஆயத்தப் பணிகளை முடித்துள்ளது. அதன் அடிப்படையில், சீன நிபுணர்கள் உள்ளிட்ட சர்வதேச நிபுணர் குழு ஒன்றை உருவாக்கி ஆராய்ச்சிகளைத் தொடரவுள்ளதாக உலகச் சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் தெட்ரோஸ் அதே நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
உலகச் சுகாதார அமைப்பின் அவசரத் திட்டப்பணிக்கான செயல் இயக்குநர் டாக்டார் மைக்கேல் ரியான் 3ஆம் நாள் கரோனா வைரஸ் குறித்த வழமையான கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, சீனாவின் வூஹான் நகரில் சார்ஸ் நோயை அடையாளம் காணும் சிறப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
இதனால், கரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் குறித்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். ஆனால், இவ்வாறு கூறுவதனால் கரோனா வைரஸ் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவிய இடம், வூஹானாக இருக்கும் எனப் பொருள்படாது எனவும் அவர் விளக்கிக் கூறினார்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்