சோமாலியா நாட்டின் ராணுவத் தளத்தில் நிகழ்ந்த வெடிவிபத்தில் ராணுவ வீரர்கள் 8 பேர் பலியாகிய சம்பவம் நடந்துள்ளது.
சோமாலியா நாட்டின் தலைநகர் மொகாடிஷுவில் உள்ள இராணுவத் தளத்தின் வாயிலில் சனிக்கிழமை கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் ராணுவ முகாமைச் சேர்ந்த 8 பேர் பலியாகினர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை ஓட்டி வந்த நபர் ராணுவத் தளத்தின் வாயில்முன் நிறுத்தி விட்டு சென்றுவிட்டார். நிலைமையை உணர்வதற்குள் குண்டுவெடித்ததில் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.