உலகம்

ரஷியாவில் புதிதாக 5,189 பேருக்கு கரோனா: 77 பேர் பலி

DIN

மாஸ்கோ: ரஷியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,189 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 77 பேர் உயிரிழந்தனர்.

பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ரஷியாவிலும் கரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக ரஷிய சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ரஷியாவில் புதிதாக 5,189 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு 8,87,536-ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் 84 மாகாணங்களில் கரோனா பரவியுள்ளது. 1,382 பேருக்கு அறிகுறிகள் இல்லாமல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 77 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 14,931-ஆக அதிகரித்துள்ளது. அங்கு கரோனா பரவல் விகிதம் 0.6%-ஆக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT