உலகம்

ரஷியாவில் கரோனா பலி 15 ஆயிரத்தைத் தாண்டியது!

DIN

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 70 பேர் உள்பட இதுவரை 15,001 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் புதிதாக 5,118 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து, அந்நாட்டில் மொத்த பாதிப்பு 8,92,654 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 70 பேர் உள்பட இதுவரை 15,001 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரத்தில் தற்போது வரை 6,96,681 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் ஒரேநாளில் 3,259 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இன்றைய நிலவரப்படி, 2,40,474 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். இதுவரை 3.08 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 

தலைநகர் மாஸ்கோவில் கடந்த 24 மணி நேரத்தில் 694 பேர் உள்பட இதுவரை 2,48,228 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT