பெய்ஜிங்கில் புதிதாக யாருக்கும் கரோனா தொற்று இல்லை
பெங்ஜிங்கில் புதிதாக எந்த கரோனா தொற்றும் பதிவாகவில்லை என்று நகராட்சி சுகாதார கமிஷன் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளது.
பெங்ஜிங்கில் புதிதாக எந்த கரோனா தொற்றும் பதிவாகவில்லை என்று சுகாதார கமிஷன் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளது.
இதுகுறித்த வெளியிட்ட தகவலின்படி,
கடந்த டிசம்பர் மாதத்தில் பரவத் தொடங்கிய கரோனா உலகம் முழுவதும் பரவி மக்களை உலுக்கி வருகின்றது. ஆனால், சமீப காலமாக சீனாவில் தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்து வருகின்றது.
இந்நிலையில், திங்கள்கிழமை தகவலின்படி அறிகுறியற்ற அல்லது சந்தேகத்திற்கிடமான வகையில் யாருக்கும் தொற்றுப் பதிவாகவில்லை.
கடந்த ஜூன் மாதத்தில் ஜின்ஃபாடி மொத்த சந்தையில் தொற்று நோய்கள் கண்டறியப்பட்ட நிலையில், அந்த நகரம் முழுவதும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ஆனால், கடந்த ஒரு மாதத்தில் ஒருவருக்கும் தொற்று பதிவாகவில்லை.
வடகிழக்கு சீனாவின் டேலியன் நகரத்தில் நான்கு பேருக்கு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், ஜூலை தொடக்கத்தில் இருந்து இதுவரை தொற்று கண்டறியப்படவில்லை என்று சுகாதார கமிஷன் தெரிவித்துள்ளது.