ஆப்கனில் கார் வெடிகுண்டு தாக்குதல்: 5 பேர் பலி, 32 பேர் காயம்
ஆப்கனில், வடக்கு பால்க் மாகாணத்தின் கார் வெடிகுண்டு மூலம் தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தப்பட்டதில் ஐந்து பேர் உயிரிழந்ததாக ராணுவ குழுவின் தளபதி தெரிவித்துள்ளார்.
ஆப்கனில் கார் வெடிகுண்டு மூலம் தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக ராணுவ குழுவின் தளபதி தெரிவித்துள்ளார்.
வடக்கு பால்க் மாகாணத்தில், உள்ளூர் நேரப்படி சரியாக காலை 9 மணியளவில் இந்த கார் வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த தாக்குதலில், 2 வீரர்கள் உள்பட 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 32-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.