இந்திய நேரப்படி திங்கள்கிழமை காலை 9.06 மணியளவில் ஓமன் நாட்டில் 5.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
தெற்கு ஈரானில் உள்ள கசாப்பிலிருந்து 340 கி.மீ தூரத்தில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சுல்தான் கபூஸ் பல்கலைக்கழகத்தின் பூகம்ப கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஆகஸ்ட் 25 அன்று இந்திய நேரப்படி காலை 11.15 மணிக்கு சலாலாவிலிருந்து அரேபிய கடலில் 570 கிமீ தூரத்தில் 2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
சுல்தான் கபூஸ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பூகம்ப கண்காணிப்பு மையம் நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.