முகப்பு
உலகம்

ரஷியாவில் கரோனா பலி உச்சம்: ஒரேநாளில் 569 பேர் உயிரிழப்பு

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26,402 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 569 பேர் உயிரிழந்துள்ளனர். 

Updated On : 1 டிசம்பர், 2020 at 6:13 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:30 PM

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26,402 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 569 பேர் உயிரிழந்துள்ளனர். 

ரஷியாவில் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு மற்றும் பலி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு கரோனா பாதிப்பு 25 ஆயிரத்தைக் கடந்து பதிவாகி வருகிறது. 

இந்நிலையில், அந்நாட்டு சுகாதாரத் துறை கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது.

Advertisement

அதன்படி, நாட்டில் புதிதாக 26,402 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 23,22,056 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் மாஸ்கோவில் 6,524 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 569 பேர் உள்பட இதுவரை 40,464 பேர் உயிரிழந்துள்ளனர். 

தற்போதுவரை 18,03,467 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், இன்றைய நிலவரப்படி 4,78,125 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.