உலகம்

லண்டன் வந்தடைந்தது முதல் கரோனா தடுப்பூசி

DIN

பைசர்-பயோஎன்டெக்கின் கரோனா தடுப்பூசிகள் முதல்முறையாக தெற்கு லண்டன் மருத்துவமனைக்கு வந்துள்ளன. அவசரகால பயன்பாட்டிற்காக பிரிட்டன் அரசு 8 லட்சம் தடுப்பூசிகளை கொள்முதல் செய்துள்ளது. 

இந்த தடுப்பூசியை பராமரிப்பது சற்று சிக்கலானதுதான். இதனை மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் (மைனஸ் 94 டிகிரி பாரன்ஹீட்) என்ற குளிர்நிலையில் வைத்திருக்க வேண்டும். 

சாதாரண குளிர்சாதனப்பெட்டியில் அதாவது 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சில நாள்களுக்கு மட்டுமே வைத்திருக்க முடியும். அதன்பின்னர் மைனஸ் 70 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையில் வைத்திருந்தால் மட்டுமே பாதுகாப்பாக இருக்கும். அதேபோன்று தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னரே குளிர்நிலையிலிருந்து அறை வெப்பநிலைக்கு மாற்ற வேண்டும். 

பிரிட்டனில் முதல்கட்டமாக உள்ளூர் மருத்துவர்களின் அலுவலகங்கள், உள்ளூர் சுகாதார மையங்களில் டிசம்பர் 14 முதல் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அமெரிக்காவைச் சேர்ந்த பைசர் நிறுவனம், ஜெர்மனியைச் சேர்ந்த பயோஎன்டெக் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள இந்த கரோனா தடுப்பூசி மூன்றாம் கட்டப் பரிசோதனையில் 95% செயல்திறனைக் கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நீதிகூட பணத்தை சார்ந்துள்ளது’: ராகுல் காந்தி

தில்லியில் வெப்பம் அதிகரிப்பு: 4 நாள்களுக்கு வட மாநிலங்கள் முழுவதும் ‘சிவப்பு’ எச்சரிக்கை

வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

விழுப்புரம் தொழிலாளி உடல் தோண்டியெடுத்து மீண்டும் உடற்கூறாய்வு!

புணேவில் படகு கவிழ்ந்து 6 பேர் மாயம்!

SCROLL FOR NEXT