முகப்பு
உலகம்

தாய்லாந்தில் மழை வெள்ளம்: பலி எண்ணிக்கை 29ஆக அதிகரிப்பு

தாய்லாந்தில் கடந்த 2 வாரங்களாகப் பெய்து வந்த மழை வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:04 PM
தாய்லாந்தில் மழை வெள்ளம்: பலி எண்ணிக்கை 29ஆக அதிகரிப்பு
பகிர்:

தாய்லாந்தில் கடந்த 2 வாரங்களாகப் பெய்து வந்த மழை வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது.

தாய்லாந்து நாட்டின் நகோன் சி தம்மரத் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழையால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர முடியாத நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் சனிக்கிழமை வெள்ளபாதிப்பு குறித்து தேசிய பேரிடர் தடுப்பு ஆணையம் அறிக்கை வெளியிட்டது. அதன்படி இதுவரை மழை வெள்ளத்தில் சிக்கி 29 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு மாகாணங்களில் உள்ள 101 மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. 4,130 கிராமங்களில் மொத்தம் 5,55,194 வீடுகள் வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ளன. 

சூரத் தானி, பட்டாலுங், சாங்ஹ்லா, சம்பன், கிராபி, டிராங், சாத்துன், யலா, பட்டானி, நாராதிவத் ஆகிய பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →