முகப்பு
உலகம்

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 842 பேர் கரோனாவுக்கு பலி

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 842 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 1,78,159 ஆக உயர்ந்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:04 PM
Brazil's COVID-19 death toll tops 178,000
பகிர்:

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 842 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 1,78,159 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலகளவில் கரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. 

கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொண்ட கரோனா பரிசோதனையில் 51,088 பேர் புதிதாகத் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 6,67,4,999 ஆக உயர்ந்துள்ளது. 

அதேசமயம் இதுவரை 5,85,4,709 பேர் தொற்று பாதித்து குணமடைந்துள்ளனர். 6,43,022 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். மேலும், 8,318 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று அந்நாட்டுச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.