தென்னாப்பிரிக்காவில் புதிய உச்சம்: ஒரேநாளில் 10ஆயிரம் பேருக்கு கரோனா
தென்னாப்பிரிக்காவில் புதிய உச்சமாக ஒரேநாளில் 10ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம்தென்னாப்பிரிக்காவில் புதிய உச்சம்: ஒரேநாளில் 10ஆயிரம் பேருக்கு கரோனா
தென்னாப்பிரிக்காவில் புதிய உச்சமாக ஒரேநாளில் 10ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் புதிய உச்சமாக ஒரேநாளில் 10ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் தற்போதைய நிலவரப்படி, 74,672,924 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 52,518,739 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 1,658,268 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,83,687ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவுக்கு மேலும் 166 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 23,827ஆஉ உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.