கரோனா வைரஸ் தொற்று உலகையை ஆட்டிப்படைத்துவரும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் இதுவரை 1,493 ஆசியர்களை கரோனா பலிவாங்கி உள்ளதாக கல்வி அமைச்சர் ஆங்கி மொட்ஷேகா கூறினார்.
இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது,
தொற்று நோயால் ஏற்பட்ட இடையூறு காரணமாக 2020-ம் கல்வியாண்டு பெறும் சவாலானது. இந்த கடினமான காலகட்டத்தில் கிட்டத்தட்ட 1,493 ஆசிரியர்களை நாங்கள் இழந்தோம், மேலும் பல தொழிலாளர்களை இழந்தோம், பல மாவட்ட அதிகாரிகளை இழந்தோம் என்று ஒரு மாநாட்டில் பேசும்போது அவர் கூறியுள்ளார்.
2021-ம் கல்வியாண்டு ஜனவரி 25-ஆம் தேதி முதல் கல்வி நிறுவனங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கும். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஜனவரி 27 முதல் மீண்டும் வகுப்பறைக்குத் திரும்ப உள்ளனர்.
கரோனா கால இழப்பிலிருந்து மீண்டு வர மூன்று ஆண்டு மீட்பு திட்டம் செயல்படுத்த வேண்டிய உள்ளதாக அவர் கூறினார்.
மேலும், வெள்ளிக்கிழமை நிலவரப்படி தென்னாப்பிரிக்காவில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 8,92,813 ஆகவும் பலி எண்ணிக்கை 24,011 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.