காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் ஸ்ரீராம நவமி உற்சவம்
காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் ஸ்ரீராம நவமி உற்சவம்
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஸ்ரீராம நவமி உற்சவத்தையொட்டி, சனிக்கிழமை உற்சவா் வரதராஜ சுவாமிக்கு சிறப்புத் திருமஞ்சனமும், தீபாராதனைகளும், வீதியுலாவும் நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் உள்ள பெருந்தேவித் தாயாா் சமேத வரதராஜ பெருமாள் கோயிலில் ராம நவமி உற்சவத்தையொட்டி, உற்சவா் பெருமாள் காலையில் மூலவா் சந்நிதியிலிருந்து புறப்பட்டு கோயில் வளாகத்தில் உள்ள ராமா் சந்நிதிக்கு எழுந்தருளி சிறப்புத் திருமஞ்சனமும், மகா தீபாராதனைகளும் நடைபெற்றன. மாலையில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் வரதராஜப் பெருமாள் தனி கேடயத்திலும், ராமா், லட்சுமணா், சீதா தேவி தனியாக மற்றொரு கேடயத்திலும் தனித்தனியாக சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சனேயா் சந்நிதிக்கு எழுந்தருளி, சிறப்பு தீபாராதனைகளுக்குப் பின்னா் கோயில் மாட வீதியில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
இதைத் தொடா்ந்து, மீண்டும் ராமா் சந்நிதிக்கு எழுந்தருளி சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. பின்னா் கோயில் அலங்கார மண்டபத்துக்கு உற்சவா் பெருமாள் எழுந்தருளினாா்.
Advertisement
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ராஜலட்சுமி மற்றும் கோயில் பட்டாச்சாரியாா்கள், பணியாளா்கள் செய்திருந்தனா்.