ஏமன் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல்: 5 பேர் பலி 
உலகம்

ஏமன் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல்: 5 பேர் பலி

ஏமனில் புதிதாக பதவியேற்ற அமைச்சரவை உறுப்பினர்கள் தரையிறங்கிய விமான நிலையத்தில் புதன்கிழமை நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

DIN

ஏமனில் புதிதாக பதவியேற்ற அமைச்சரவை உறுப்பினர்கள் தரையிறங்கிய விமான நிலையத்தில் புதன்கிழமை நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஏமன் நாட்டின் தெற்கு பிரிவினைவாதிகளும், பன்னாட்டு நாடுகளின் அங்கீகாரம் பெற்ற அரசும் இணைந்து கடந்த 18ஆம் தேதி புதிய அரசை அமைத்தன. இதற்கான பதவியேற்பு நடந்து முடிந்த நிலையில் புதிதாக பதவியேற்ற பிரதமரும், அமைச்சர்களும் ஏடன் விமான நிலையத்தில் புதன்கிழமை  வந்திறங்கினர்.

இந்நிலையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதனைத் தொடர்ந்து மெய்ன் அப்துல்மாலிக், யேமனுக்கான சவுதி தூதர் முகமது சையத் அல்-ஜாபர் உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் வரை பலியாகியுள்ளதாகவும் 12க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT