முகப்பு
உலகம்

யேமன் விமான நிலைய வெடிகுண்டு தாக்குதலுக்கு இராக் கண்டனம்

யேமனில் புதிதாக பதவியேற்ற அமைச்சரவை உறுப்பினர்கள் தரையிறங்கிய விமான நிலையத்தில் புதன்கிழமை நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இராக் கண்டனம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
யேமன் விமான நிலைய வெடிகுண்டு தாக்குதலுக்கு இராக் கண்டனம்
பகிர்:

யேமனில் புதிதாக பதவியேற்ற அமைச்சரவை உறுப்பினர்கள் தரையிறங்கிய விமான நிலையத்தில் புதன்கிழமை நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இராக் கண்டனம் தெரிவித்துள்ளது.

யேமனில் புதிதாக பதவியேற்ற அமைச்சரவை உறுப்பினர்கள் தரையிறங்கிய விமான நிலையத்தில் புதன்கிழமை நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் யேமன் நாட்டின் விமான நிலையத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு இராக் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இராக் அதிபர் அகமது அல்-சஹாஃப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “யேமன் நாட்டில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலை இராக் கடுமையாக கண்டிக்கிறது. சகோதர நாடான யேமனுக்கு எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். பயங்கரவாதத்தை அனைத்து வடிவங்களிலும் இராக் நிராகரிக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.

யேமன் விமான நிலையத்தின் மீதான பயங்கர தாக்குதலை ரஷியா, அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் ஏற்கனவே கண்டித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.