முகப்பு
உலகம்

ரஷ்யாவில் கரோனா வைரஸ் பாதித்த 2வது நோயாளியும் குணமடைந்து வீடு திரும்பினார்

ரஷ்யாவில் கரோனா வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்று வந்த இரண்டாவது நோயாளியும், பூரண குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:49 PM
பகிர்:


மாஸ்கோ: ரஷ்யாவில் கரோனா வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்று வந்த இரண்டாவது நோயாளியும், பூரண குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார்.

அவருக்கு ஒரு பெட்டி நிறைய விட்டமின் மாத்திரைகளை மருத்துவமனை நிர்வாகம் வழங்கியுள்ளது.

இன்று அவர் பூரண குணமடைந்துவிட்டார். அவரால் பொதுமக்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று சிட்டா தொற்றுநோய் மருத்துவமனை மருத்துவர் செர்கேய் யார்சுக் தெரிவித்துள்ளார்.

அவருக்கு ஏராளமான விட்டமின் மாத்திரைகளை வழங்கியுள்ளோம். உடல்நலனைக் கவனமாக பார்த்துக் கொள்ளவும், இனி எப்போதும் உடல்நலன் பாதிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியிருப்பதாகவும் மருத்துவர் கூறினார்.

கரோனா என்று அழைக்கப்படும் கோவிட்-19 வைரஸ் பாதித்த இரண்டு பேர் மட்டுமே ரஷ்யாவில் இருந்தனர். அவர்களும் பூரண குணம் அடைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பேருமே சீனர்கள் என்பது குறிப்பிடத்தகக்து.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.