உலகம்

ஆஸ்திரேலியாவில் பயணிகள் ரயில் தடம்புரண்டது: 2 பேர் பலி

DIN

ஆஸ்திரேலியாவில் பயணிகள் ரயில் தடம்புரண்டதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து 160 பயணிகளுடன் மெல்போர்ன் நோக்கி பயணிகள் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் வாலன் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது திடீரென தடம்புரண்டது. 

இந்த விபத்தில் 5 பெட்டிகள் தடம்புரண்டதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

அச்சுக் காகிதங்களில் பொட்டலமிட்டால் அபராதம்

ஈராச்சியில் மாட்டுவண்டி பந்தயம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

SCROLL FOR NEXT