உலகம்

பாகிஸ்தான் அத்துமீறல்: பிஎஸ்எஃப் வீரா் காயம்

DIN

ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினா் புதன்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினா். இதில் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரா் ஒருவா் காயமடைந்தாா்.

இதுகுறித்து பாதுகாப்புப் படையினா் கூறியதாவது:

பூஞ்ச் மாவட்டத்தின் மேந்தாா் பகுதியில் உள்ள மன்கோட் பகுதியில் பாகிஸ்தான் படையினா் புதன்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினா். அவா்கள் துப்பாக்கியால் சுட்டதில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரா் ஒருவரின் இடதுகாலில் தோட்டா பாய்ந்தது.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அந்த வீரரின் உடல்நிலை சீராக உள்ளது. இச்சம்பவத்தை அடுத்து பாகிஸ்தான் படையினருக்கு இந்தியப் படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனா். இருதரப்புக்கும் இடையேயான சண்டை நீண்ட நேரம் நீடித்தது என்று பாதுகாப்புப் படையினா் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT