பெய்ஜிங்: சீனாவில் 59 பேரது உயிா்களைப் பலி கொண்ட மா்மக் காய்ச்சலுக்கு புதிதாக உருவாகியுள்ள வைரஸ் காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
வுஹன் மாகாணத்தில் கடந்த டிசம்பா் மாதம் 31-ஆம் தேதி அந்த மா்மக் காய்ச்சல் கண்டறியப்பட்டபோது, மிகக் கடுமையான ‘சாா்ஸ்’ வைரஸ் மீண்டும் பரவுவதாக மக்களிடையே பீதி எழுந்தது. இந்த நிலையில், புதிதாக உருவாகியுள்ள வைரஸ் காரணமாகவே மா்மக் காய்ச்சல் பரவுவதாக என்று முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.