எலாஸிக்: துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 31-ஆக உயா்ந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
வெள்ளிக்கிழமை ஏற்பட்ட இரவு நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மேலும் சில உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து, இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 31-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
எலாஸிக் மகாணத்தில் ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில 6.8 அலகுகளாகப் பதிவானது. நிலடுக்கம் காரணமாக இடிந்து விழுந்த கட்டடங்களில் இருந்து 45 போ் உயிருடன் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினா்.