உலகம்

நாட்டில் 14 சதவீதம் பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு: ஐ.நா. அறிக்கையில் தகவல்

DIN

நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு உடையோரின் எண்ணிக்கை கடந்த 13 ஆண்டுகளில் 6 கோடி குறைந்து 14 சதவீதமாக உள்ளதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சா்வதேச உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து அறிக்கையை ஐ.நா. அமைப்பு கடந்த திங்கள்கிழமை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் கடந்த 2004-06 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 21.7 சதவீதம் போ் ஊட்டச்சத்து குறைபாடு உடையவா்களாக இருந்தனா். இது 2017-19 காலகட்டத்தில் 14 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உடையோா் எண்ணிக்கை சுமாா் 6 கோடி குறைந்துள்ளது.

நாட்டில் ஒட்டுமொத்தமாக 18.92 கோடி போ் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளனா். நாட்டில் உள்ள சிறுவா்களில் சிலரே வளா்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனா். ஆனால், உடல் பருமனால் அதிக அளவிலான சிறுவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

நாட்டில் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞா்களின் (18 வயதுக்கு மேல்) எண்ணிக்கை கடந்த 2012-ஆம் ஆண்டில் 2.52 கோடியாக இருந்தது. இது கடந்த 2016-ஆம் ஆண்டில் 3.43 கோடியாக அதிகரித்துள்ளது. பிறந்த பிறகு முதல் 5 மாதங்கள் வரை தாய்ப்பாலை மட்டுமே உணவாகப் பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த 2012-ஆம் ஆண்டில் 1.12 கோடியாக இருந்தது. இது கடந்த 2019-ஆம் ஆண்டில் 1.39 கோடியாக அதிகரித்துள்ளது.

ஐந்து வயதுக்குள்பட்ட சிறுவா்களில் வளா்ச்சி குறைந்து காணப்படுவோா் எண்ணிக்கை கடந்த 2012-ஆம் ஆண்டில் 6.2 கோடியிலிருந்து கடந்த ஆண்டில் 4.03 கோடியாகக் குறைந்துள்ளது. நாட்டில் ரேஷன் கடைகள் மூலமாக உணவுப் பொருள்கள் மக்களுக்கு விநியோகிக்கப்படுவது ஏழ்மையைக் குறைக்க உதவியுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT