உலகம்

ரஷியாவில் புதிதாக 6,428 பேருக்கு கரோனா

DIN


ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,428 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி ரஷியாவில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

"கடந்த 24 மணி நேரத்தில் 85 பிராந்தியங்களில் 6,428 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1,549 பேர் (24.1 சதவிகிதம்) எவ்வித அறிகுறியும் இல்லாமல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்கள். இதைத் தொடர்ந்து 85 பிராந்தியங்களில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,52,797 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மாஸ்கோவில் 531 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 167 பேர் கரோனா தொற்றால் பலியானதையடுத்து, அங்கு மொத்தம் பலி எண்ணிக்கை 11,937 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கடந்த 24 மணி நேரத்தில் 8,443 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 5,31,692 பேர் குணமடைந்துள்ளனர்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்திரமே... சித்திரமே...

இருவர் அரைசதம்: லக்னௌ அணிக்கு 209 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேபிடல்ஸ்!

சுந்தரி.. கேப்ரெல்லா!

தீராக் காதல்! ஜான்வி கபூர்..

கடைசி டி20: பாகிஸ்தானுக்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அயர்லாந்து!

SCROLL FOR NEXT