கராச்சியில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு
பாகிஸ்தானில் அடுக்குமாடி குடியிருப்பு வியாழக்கிழமை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானில் அடுக்குமாடி குடியிருப்பு வியாழக்கிழமை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள குல்பஹார் பகுதியில் 5 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு நேற்று இடிந்து விழுந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 14ஆக உயர்ந்துள்ளது. மேலும் 17 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க கராச்சி மேயர் வாசிம் அக்தர் உத்தரவிட்டார். இதனிடையே இடிந்து விழுந்த கட்டடத்தின் கட்டுமானம் குறித்த விரிவான அறிக்கையை வழங்க சிந்து மாகாண முதல்வர் சையத் முராத் அலி ஷா உத்தரவிட்டுள்ளார்.