உலகம்

கரோனா: அமெரிக்காவில் அவசர நிலையை அறிவித்தார் அதிபர் டிரம்ப்

கரோனா வைரஸ் (கொவைட்-19) நோய் தொற்று காரணமாக அமெரிக்காவில் அவசர நிலையை வெள்ளிக்கிழமை அறிவித்தார் அதிபர் டொனால்ட் டிரம்ப்.

DIN

கரோனா வைரஸ் (கொவைட்-19) நோய் தொற்று காரணமாக அமெரிக்காவில் அவசர நிலையை வெள்ளிக்கிழமை அறிவித்தார் அதிபர் டொனால்ட் டிரம்ப்.

இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பின் போது டிரம்ப் கூறியதாவது, "கரோனா வைரஸ் (கொவைட்-19) நோய் தொற்று காரணமாக அமெரிக்காவுக்கு அவசர நிலையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன்".

அனைத்துப் பகுதிகளிலும் உடனடியாக அவசரகால செயல்பாட்டு மையங்களை அமைக்க வேண்டும். அனைத்து மருத்துவமனைகளும் அவற்றின் அவசரகால செயல்பாட்டு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று டிரம்ப் அறிவித்தார்.

கொலம்பியா மற்றும் 48 மாநிலங்களில் மட்டும் இதுவரை 1,740 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது வரை மொத்தம் 41 பேர் உயிரிழந்தனர், அவர்களில் 31 பேர் வாஷிங்டனைச் சேர்ந்தவர்கள் ஆவர். 

வாஷிங்டனில் 457 பேரும், கலிஃபோர்னியாவில் 4 பேரும், ஃபுளோரிடாவில் 2 பேரும், ஜார்ஜியா, கன்சாஸ், நியூ ஜெர்சி மற்றும் தெற்கு டகோட்டாவில் தலா ஒருவருக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

மத்திய பட்ஜெட்: ஒரு பார்வை

SCROLL FOR NEXT