சீனாவில் நேற்று கரோனாவுக்கு 14 பேர் பலி; 2,975 பேர் கவலைக்கிடம்
சீனாவில் நேற்று ஒரே நாளில் கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உள்ளது. இதன் மூலம் சீனாவில் மட்டும் கரோனா பாதிப்புக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,213 ஆக உயர்ந்துள்ளது.
பெய்ஜிங்: சீனாவில் நேற்று ஒரே நாளில் கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக இருந்தது. இதன் மூலம் சீனாவில் மட்டும் கரோனா பாதிப்புக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,213 ஆக உயர்ந்துள்ளது.
இந்த தகவலை சீனாவின் தேசிய நல்வாழ்வுத் துறை ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் 16 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 80,860 ஆக உயர்ந்துள்ளது.
திங்கட்கிழமை முதல் பெய்ஜிங்கில் உள்ள வெளிநாட்டு பயணிகள் அனைவரையும், தங்கள் இருப்பிடங்களிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள சீன அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்போது சீனாவில் கரோனா பாதித்து 2,975 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.