உலகம்

லிபியாவில் முதல் நபருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி 

DIN

லிபியாவில் முதல் நபருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சீனாவை அச்சுறுத்திய கரோனா வைரஸ் தற்போது உலக முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை கடைபிடித்து வருகின்றன. 

வைரஸ் (கொவைட்-19) பாதிப்பால் உலகம் முழுவதும் இதுவரை உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தைக் கடந்தது. உலக நாடுகளிலேயே கரோனா வைரஸ் பாதிப்பால் இத்தாலியில்தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் லிபியாவில் முதல் நபருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் எமிட் பின் ஒமர் அதிகாரபூர்வமாக தெவித்துள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்டவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

பேருந்தில் காசுகளை சிதற விட்டு நகை திருடிய ஆந்திரப் பெண் கைது

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்: 300 பயணிகள் அவதி

SCROLL FOR NEXT