singapore094045 
உலகம்

சிங்கப்பூரில் சுமார் 4,800 இந்தியர்களுக்கு கரோனா பாதிப்பு

சிங்கப்பூரில் வசித்து வரும் இந்திய தொழிலாளர்களில் சுமார் கடந்த ஏப்ரல் இறுதி வரையிலான காலக்கட்டத்தில் 4,800 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.

PTI


சிங்கப்பூரில் வசித்து வரும் இந்திய தொழிலாளர்களில் கடந்த ஏப்ரல் இறுதி வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 4,800 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் கரோனா பாதித்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 18,205 ஆகும். இதுவரை கரோனா பாதித்து 18 பேர் மரணம் அடைந்துள்ளதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், கரோனா பாதித்த இந்தியர்கள் அனைவருக்கும் லேசான பாதிப்புதான் இருப்பதாகவும், அனைவரின் உடல்நிலையும் சீரடைந்து வருவதாகவும் சிங்கப்பூருக்கான இந்திய தூதர் ஜாவேத் அஷ்ரத் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதத்திலேயே சிங்கப்பூர் அரசு எடுத்த தீவிர நடவடிக்கை காரணமாக, அதிகப்படியான மருத்துவப் பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் நடவடிக்கையால், கரோனா தொற்று பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT