முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு 22 ஆயிரம் ஆனது; ஒரே நாளில் 40 பேர் பலி

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை காலை நிலவரப்படி 22 ஆயிரத்தைக் கடந்தது. நேற்று ஒரே நாளில் கரோனா பாதித்து 40 பேர் பலியாகியுள்ளனர்

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:36 PM
pakistan094642
பகிர்:

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை காலை நிலவரப்படி 22 ஆயிரத்தைக் கடந்தது. நேற்று ஒரே நாளில் கரோனா பாதித்து 40 பேர் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து அந்த நாட்டு தேசிய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,049 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் சோ்த்து, நாட்டில் அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 22,413-ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 40 போ் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தனா். இதையடுத்து அந்த நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 526-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.