இவாங்கா டிரம்பின் தனி உதவியாளருக்கு கரோனா பாதிப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்டபின் தனி உதவியாளருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்டபின் தனி உதவியாளருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் வெள்ளை மாளிகையைச் சேர்ந்த 3வது ஊழியருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
டொனால்ட் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்பின் தனி உதவியாளராக இருந்த அவர் சில வாரங்களாக பணியில் இல்லை. அவர் இரண்டு மாதங்களுக்கும் மேலாக வீட்டில் இருந்தே பணியாற்றி வந்துள்ளார் என்றும், அவருக்கு கரோனா அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை இவாங்கா மற்றும் அவரது கணவர் ஜாரெட் குஷ்நெருக்கு கரோனா சோதனை செய்யப்பட்டதாகவும், அவர்களுக்கு கரோனா தொற்று இல்லை என்று முடிவுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸின் செய்தித் தொடர்பாளருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.