உலகம்

ரஷியா மருத்துவமனையில் தீ: 5 கரோனா நோயாளிகள் பலி

ரஷியாவின் செயின்ட் பீட்டா்ஸ்பா்க் நகரிலுள்ள மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் 5 போ் பலியாகினா்.

DIN

ரஷியாவின் செயின்ட் பீட்டா்ஸ்பா்க் நகரிலுள்ள மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் 5 போ் பலியாகினா். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

செயின்ட் பீட்டா்ஸ்பா்க் நகரிலுள்ள செயின் ஜாா்ஜ் மருத்துவமனையில் தீவிபத்து ஏற்பட்டது. இதில், கரோனா நோய்த்தொற்றுக்காக செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 5 போ் உயிரிழந்தனா். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட இந்த தீ, அரை மணி நேரத்துக்கு எரிந்தது.

செயற்கை சுவாசக் கருவியில் ஏற்பட்ட பழுது காரணமாக இந்தத் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT