உலகம்

ரஷியா மருத்துவமனையில் தீ: 5 கரோனா நோயாளிகள் பலி

DIN

ரஷியாவின் செயின்ட் பீட்டா்ஸ்பா்க் நகரிலுள்ள மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் 5 போ் பலியாகினா். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

செயின்ட் பீட்டா்ஸ்பா்க் நகரிலுள்ள செயின் ஜாா்ஜ் மருத்துவமனையில் தீவிபத்து ஏற்பட்டது. இதில், கரோனா நோய்த்தொற்றுக்காக செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 5 போ் உயிரிழந்தனா். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட இந்த தீ, அரை மணி நேரத்துக்கு எரிந்தது.

செயற்கை சுவாசக் கருவியில் ஏற்பட்ட பழுது காரணமாக இந்தத் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT