சீனத் தேசிய மக்கள் பேரவையின் கூட்டத் தொடர் 22 ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங்கில் தொடங்கியது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங், அன்று பிற்பகல் உள் மங்கோலியா பிரதிநிதிக் குழு பிரதிநிதிகளுடன் சீன அரசுப் பணி அறிக்கை குறித்து கூட்டாகப் பரிசீலனை செய்தார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி எப்பொழுதும் மக்களின் நலன்களையே முதலிடம் வைத்துள்ளது. சீன மக்களின் உயிர் பாதுகாப்பையும் உடல் நலத்தையும் முழுமையாகப் பாதுகாக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்