உலகம்

ஆப்கனில் ராணுவ நிலையில் குண்டு வெடிப்பில் ஆறு பேர் பலி

DIN

கண்டுஸ்: ஆப்கனில் காலி செய்யப்பட்ட ராணுவ நிலையில் நடந்த குண்டு வெடிப்பில் ஆறு பேர் பலியானார்கள்.

வடக்கு ஆப்கனில் உள்ள கண்டுஸ் மாகணத்தில் கானாபாத் மாவட்டம் உள்ளது. இங்குள்ள ராணுவ நிலை ஒன்றில் புதன் காலை 7 மணியளவில் நடந்த குண்டுவெடிப்பில் பொதுமக்கள் ஆறு பேர் பலியானர்கள்; மேலும் பேர் படுகாயமடைந்தனர்.

சம்பவம் குறித்து கூடுதல் தகவல்கள் எதுவும் தெரிவிக்காத உள்ளூர் அரசுத்துறை அதிகாரியான குவாதரத்துல்லா சபி, குண்டுவெடிப்பிற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து சின்ஹுவா செய்தி நிறுவனத்திடம் பேசிய பெயர் வெளியிட விரும்பாத உள்ளூர் வாசி ஒருவர், ‘கானாபாத் மாவட்டத்தில் உள்ள சிறிய ராணுவ நிலையினை புதன் அதிகாலை 1 மணியளவில் ராணுவ வீரர்கள் காலி செய்ததாகவும், அப்போது அப்பகுதி கிராமவாசிகளிடம் வந்த தலிபான் பயங்கரவாதிகள் ராணுவநிலைக்குச் சென்று அங்குள்ள கைவிடப்பட்ட பொருட்களை எடுத்துக் கொள்ளுமாறு கூறியதாகவும் தெரிவித்தார். அதன்படி கிராமவாசிகள் காலை 7 மணியளவில் அங்கு சென்று பொருட்களை சேகரித்துக் கொண்டிருந்த சமயம் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT