அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் ட்ரம்ப் மற்றும் ஜோ பிடன் 
உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்ப்-ஜோ பிடன் இடையேயான விவாதம் ரத்து

நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபா் தோ்தலின் வேட்பாளர்கள் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையே நடைபெற இருந்த இரண்டாவது விவாதம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

DIN

நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபா் தோ்தலின் வேட்பாளர்கள் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையே நடைபெற இருந்த இரண்டாவது விவாதம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நவம்பர் மாதம் 3-ஆம் தேதி அதிபா் தோ்தல் நடைபெறவுள்ளது. அந்தத் தோ்தலில் குடியரசுக் கட்சி சாா்பில் தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் ஜனநாயகக் கட்சி சாா்பில் முன்னாள் துணை அதிபா் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனா்.

துணை அதிபா் பதவிக்கு, குடியரசுக் கட்சி சாா்பில் தற்போதைய துணை அதிபா் மைக் பென்ஸும் ஜனநாயகக் கட்சி சாா்பில் இந்திய வம்சாவளி எம்.பி. கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனா்.

அமெரிக்காவில் தோ்தலுக்கு முன்னதாக போட்டியாளா்கள் நேரடியாக விவாதத்தில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி, அதிபா் வேட்பாளா்கள் டிரம்ப்புக்கும் ஜோ பிடனுக்கும் இடையிலான முதல் நேரடி விவாதம் ஓஹியோ மாகாணம் கிளீவ்லாண்டில் கடந்த மாதம் 29-ஆம் தேதி நடைபெற்றது.

மிகவும் காரசாரமாக நடைபெற்ற அந்த விவாதத்தின்போது, இருவரும் பரஸ்பரம் கடுமையாகத் தாக்கிப் பேசினா்.

அதனைத் தொடர்ந்து துணை அதிபா் வேட்பாளா்களான மைக் பென்ஸுக்கும் கமலா ஹாரிஸுக்கும் இடையிலான விவாதம் யுடா மாகாணம், சால்ட் லேக் சிட்டியில் இந்திய நேரப்படி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிலையில் அக்டோபர் 15 ஆம் தேதி புளோரிடாவின் மியாமாயில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையேயான இரண்டாவது அதிபர் தேர்தல்  விவாதம் ரத்து செய்யப்பட்டுள்ளது

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் காணொலிக் காட்சி மூலம் ஜோ பிடன் உடன் விவாதிக்க டிரம்ப் மறுத்ததைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் அக்டோபர் 22ஆம் தேதி டென்னசி மாகாணத்தின் நாஷ்வில்லியில் திட்டமிடப்பட்டிருந்த மூன்றாவது விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச்சந்தை கடும் சரிவு! சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது!

கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களைப் பயன்படுத்த தடை! சென்னை உயர்நீதிமன்றம்

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்ட விஜய்! | TVK

பிஎஸ்எல்வி சி-62 பாதையைவிட்டு விலகியது! இஸ்ரோ

கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT