முகப்பு
உலகம்

தாய்லாந்தில் பேருந்து மீது ரயில் மோதல்: 17 பேர் பலி

தாய்லாந்தில் பேருந்து மீது ரயில் மோதியதில் 17 பேர் பலியானார்கள். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

தாய்லாந்தில் பேருந்து மீது ரயில் மோதியதில் 17 பேர் பலியானார்கள். 

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சாச்சோயெங்சாவோ மாகாணத்தில் உள்ள புத்த கோயிலுக்கு பேருந்து இன்று சென்றுகொண்டிருந்தது. அந்தப் பேருந்து கிலாங் கவீங் கிலன் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே கிராசிங்கை இன்று காலை 8 மணியளவில் கடக்க முயன்றது. 

அப்போது அந்த வழியாக வந்த ரயில், பேருந்து மீது பயங்கரமாக மோதியது. மோதி வேகத்தில் பேருந்து தூக்கி எறியப்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 17 பேர் பலியானார்கள். 29 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். பலர் காயமடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →