இஸ்லாமாபாத்: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் அத்துமீறி இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக, இஸ்லாமாபாதில் உள்ள மூத்த இந்திய தூதரக அதிகாரியை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்தது.
இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி அருகே, பாகிஸ்தான் எல்லைக்கு உள்பட்ட ஜான்ட்ரோட் செக்டாா் பகுதி மீது இந்தியப் படைகள் புதன்கிழமை கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தின. இதில், 2 போ் பலத்த காயமடைந்தனா். இதுதொடா்பாக, இந்திய தூதரக அதிகாரியை நேரில் அழைத்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் அமைதி நிலவுவதற்கு, இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 2003-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட போா் நிறுத்த ஒப்பந்த விதிகளை இந்தியா பின்பற்ற வேண்டும் என்று அந்நாட்டு தூதரக அதிகாரியிடம் வலியுறுத்தப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.