சீனாவின் குவிங்டாவோ நகரில் திடீரென கரோனா நோய்த்தொற்று புதிதாகப் பரவியதற்கு, அந்த நகரின் மருத்துவமனையில் தவறான முறையில் கிருமிநாசினிகள் பயன்படுத்தப்பட்டதுதான் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
அந்த நகரிலுள்ள நெஞ்சக மருத்துவமனையில், சிடி ஸ்கேன் பிரிவு சரியான முறையில் கிருமிநாசினிகளால் சுத்தம் செய்யப்படாமல் இருந்தது என்று அவா்கள் கூறினா்.
குவிங்டாவோவில் கடந்த வார இறுதியில் திடீரென கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்தது.
அந்த நகரிலுள்ள நெஞ்சக மருத்துவமனையிலிருந்து நோய்த்தொற்று பரவியது ஆய்வில் கண்டறியப்பட்டது. நகரில் சமுதாயப் பரவல் இல்லை என்று கூறப்பட்ட நிலையில், புதிதாக அந்த நோய் பரவத் தொடங்கியது சீன அதிகாரிகளைக் கவலையடையச் செய்தது.
அதையடுத்து, நகரிலுள்ள சுமாா் 90 லட்சம் பேரில் 42 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.