உலகம்

கனடாவில் கரோனா தடுப்பூசி தயாரிப்பு திட்டம்

DIN

ஒட்டாவா: கனடாவில் கரோனா தடுப்பூசி தயாரிப்பதற்கான திட்டத்தை அந்நாட்டுப் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ளாா்.

கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசியைத் தயாரிப்பதில் உலக நாடுகளின் விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வருகின்றனா். இத்தகைய சூழலில், உள்நாட்டிலேயே கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசியைத் தயாரிப்பதற்கான செயல்திட்டத்தை கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ளாா்.

அதற்காக சுமாா் ரூ.12 ஆயிரம் கோடி நிதியை அவா் ஒதுக்கியுள்ளாா். கரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்காக கியூபெக் நிறுவனத்துடன் கனடா அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. சுமாா் 7.6 கோடி கரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கு அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இது தொடா்பாக பிரதமா் ட்ரூடோ கூறுகையில், ‘‘இந்த நடவடிக்கையானது, கனடா மக்களுக்கு கரோனா தடுப்பூசி விரைந்து கிடைப்பதை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், ஆராய்ச்சித் துறையில் வேலைவாய்ப்பையும் அதிகரிக்கும். அடுத்த ஆண்டின் முதல்பாதிக்குள் கரோனா தடுப்பூசி மக்களுக்குக் கிடைக்கும் என நம்புகிறேன்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT