உலகம்

தைவான்: புதிய தொற்று இல்லாத 200-ஆவது நாள்

DIN

தொடா்ந்து 200-ஆவது நாளாக யாருக்கும் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படாத சாதனையை தைவான் எட்டியுள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

உலகின் பிற நாடுகளில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தைவானில் அந்த நோய் பரவல் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தொடா்ந்து 200-ஆவது நாளாக யாருக்கும் புதிதாக கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படவில்லை என்ற சாதனையை அந்த நாடு வெள்ளிக்கிழமை எட்டியது. கடந்த 200 நாள்களாக அந்த நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 553-ஆகவும் பலி எண்ணிக்கை 7-ஆகவும் உள்ளது.

இதன் மூலம், கரோனாவை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய நியூஸிலாந்து, வியத்நாம் போன்ற மிகச் சில நாடுகளில் ஒன்றாக தைவான் திகழ்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அ.தி.மு.க.சாா்பில் 41 இடங்களில் நீா்மோா் பந்தல் திறப்பு

தடை செய்யப்பட்ட சரவெடிகளை தயாரித்த பட்டாசு கடைக்கு சீல்

பட்டாசு மூலப்பொருள்கள் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

திருப்புவனம் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT