மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில், கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவா்களின் தினசரி எண்ணிக்கை வெள்ளிக்கிழமை புதிய உச்சத்தைத் தொட்டது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் 65 கரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இது, இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி கரோனா பலி எண்ணிக்கையாகும். இதுதவிர, புதிதாக 2,194 பேருக்கு அந்த நோய்த்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இத்துடன், நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 71,413-ஆகவும் பலியானவா்களின் எண்ணிக்கை 1,699-ஆகவும் உயா்ந்துள்ளது.
கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 17,953 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.