மெக்சிகோவில் கரோனா பலி எண்ணிக்கை 66,851 ஆக உயர்வு
மெக்சிகோவில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 522 உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 66,851 ஆக உயர்ந்துள்ளது
மெக்சிகோவில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 522 உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 66,851 ஆக உயர்ந்துள்ளது என்று துணை சுகாதார அமைச்சர் ஹ்யூகோ லோபஸ்-கேட்டெல் தெரிவித்தார்.
மேலும் கடந்த ஒரேநாளில் 6,196 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளதை அடுத்து மொத்த பாதிப்பு 6,23,090 ஆக அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.
ஒரு நாள் முன்னதாக, லத்தீன் அமெரிக்காவில் 5,937 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளது. இதில் 513 பேர் உயிரிழந்தனர்.
இன்றுவரை, உலகளவில் 26.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,72,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.