முகப்பு
உலகம்

காங்கோ தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு; 50 பேர் பலி

காங்கோ தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
கோப்புப் படம்
பகிர்:


கின்ஷாசா: காங்கோ தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கிழக்கு காங்கோவின் தெற்கு கிவு மாகாணத்தின் கமிதுகா நகரில் பெய்து வரும் கனமழை காரணமாக தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு நேரிட்டதாகக் கூறப்படுகிறது.

சுரங்கத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த 50க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக மாகாண மேயர் தியோ கசி தெரிவித்துள்ளார். மேலும், பலியானவர்கள் அனைவரும் இளைஞர்கள். பலியானவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.