உலகம்

காங்கோ தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு; 50 பேர் பலி

PTI


கின்ஷாசா: காங்கோ தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கிழக்கு காங்கோவின் தெற்கு கிவு மாகாணத்தின் கமிதுகா நகரில் பெய்து வரும் கனமழை காரணமாக தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு நேரிட்டதாகக் கூறப்படுகிறது.

சுரங்கத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த 50க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக மாகாண மேயர் தியோ கசி தெரிவித்துள்ளார். மேலும், பலியானவர்கள் அனைவரும் இளைஞர்கள். பலியானவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

SCROLL FOR NEXT