உலகம்

பாகிஸ்தான்: தினசரி கரோனா பலி புதிய உச்சம்

DIN


இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கரோனா தொற்றுக்கு பலியாவோரின் தினசரி எண்ணிக்கை புதன்கிழமை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனா பாதிப்பு காரணமாக 135 பேர் உயிரிழந்தனர். இது நாட்டின் அதிகபட்ச தினசரி கரோனா பலி எண்ணிக்கையாகும். இத்துடன் அந்த நோய்க்கு பலியானவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 15,754-ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கூடுதலாக 4,503 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 7,34,423-ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதன்கிழமை நிலவரப்படி, பாகிஸ்தானில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 6,41,912 பேர் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்; 76,757 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 
அவர்களில் 4,216 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT