உலகம்

வியத்நாம்: 2025 ஆம் ஆண்டு முதல் இருசக்கர வாகனங்களுக்குத் தடை

DIN

வியத்நாம் தலைநகர் ஹனாயில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வரும் 2025 ஆம் ஆண்டு முதல் இருசக்கர வாகனங்களுக்குத் தடை விதிக்கபட இருக்கிறது.

வியட்நாமின் தலைநகர் ஹனாய் சுற்றுலா பயணிகளின் முக்கிய தளமாக இருந்து வருகிறது. இருப்பினும் அதிகப்படியான வாகன நெரிசல்கள் மற்றும் காற்று மாசுப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு வரும் 2025-ஆம் ஆண்டு முதல் ஹனாயின் அனைத்து மாவட்டங்களிலும் இருசக்கர வாகனங்கள் சாலையில் செல்ல தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக சில முக்கிய சாலைகளில் இந்த தடை அமலுக்கு வரும் என்றும் பிற்பாடு 2030 -க்குள் அனைத்து சாலைகளிலும் இருசக்கர வாகனத்திற்கு தடை விதிக்கப்படும் எனறும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

ஹனாயில் 50 லட்சம் இருசக்கர வாகனங்கள் பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT