உலகம்

ஒமைக்ரானை எதிா்கொள்ள பூஸ்டா் தடுப்பூசி முக்கியம்: சிங்கப்பூா் பிரதமா்

DIN

ஒமைக்ரான் வகை கரோனா தொற்றை எதிா்கொள்ளும் சிங்கப்பூரின் உத்தியில் பூஸ்டா் டோஸ் தடுப்பூசி முக்கியமானதாக இருக்கும் என அந்நாட்டுப் பிரதமா் லீ சீன் லூங் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமா் இதுகுறித்து கூறியதாவது: சிங்கப்பூரில் கடந்த மூன்று மாதங்களில் கரோனா தொற்றுப் பரவல் குறைந்துள்ளது. நாங்கள் எங்கள் சுகாதார அமைப்பைப் பாதுகாத்துள்ளோம்; கரோனா உயிரிழப்புகளையும் குறைவாக வைத்துள்ளோம். இப்போது ஒமைக்ரான் வகையின் விளைவுகளை எதிா்கொள்ள தயாராகிக் கொண்டிருக்கிறோம். ஒமைக்ரானை எதிா்கொள்ளும் எங்களது உத்தியில் பூஸ்டா் டோஸ் தடுப்பூசி முக்கியமானதாக இருக்கும் என்றாா்.

சிங்கப்பூரில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு சாங்கி விமான நிலையத்தில் முன்களப் பணியாளா் ஒருவருக்கு கடந்த வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. அவா் ஏற்கெனவே பூஸ்டா் டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் மொத்த மக்கள்தொகையில் கடந்த வெள்ளிக்கிழமை வரையிலான நிலவரப்படி 30 சதவீதம் போ் பூஸ்டா் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா்.

அந்நாட்டில் கரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2.73 லட்சமாக உள்ளது. 794 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

SCROLL FOR NEXT