ஜப்பான் நாட்டின் ஒசாகா மாவட்டத்தில் ஏற்பட்ட கட்டட தீ விபத்தில் 27 பேர் பலியாகியிருக்கிறார்கள்.
ஜப்பானின் ஒசாகா மாவட்டத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி வணிகக் கட்டடத்தின் 4-வது மாடியில் இன்று காலை திடிரென தீப்பிடிக்க ஆரம்பித்தது.
உடனடியாக மீட்புப்படையினர் வந்து தீயை அணைப்பதற்குள் மற்ற தளங்களுக்கும் தீ வேகமாகப் பரவத் தொடங்கியது. இதனால், அங்கிருந்த மக்களில் 27 பேர் பலியானதாகவும் , ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டதாகவும் மீட்புப்படையினர் தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும், கட்டடத்தில் மீட்புப் பணி தொடர்ந்து வருகிறது.