உலகம்

நார்வே நிலச்சரிவு: 2 வாரங்களுக்குப் பிறகு இருவரது உடல்கள் மீட்பு

நார்வே நாட்டின் ஜெஜெர்ட்ரம் நகரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய இருவர் 2 வார காலத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டனர்.

DIN

நார்வே நாட்டின் ஜெஜெர்ட்ரம் நகரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய இருவர் 2 வார காலத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டனர்.

தெற்கு நார்வேயின் ஜெஜெர்ட்ரம் நகரத்தில் கடந்த புதன்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ள 12க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்தன. மேலும் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் வரை பலியாகியும், 10 பேர் காயமடைந்தும் உள்ளனர். 

நிலச்சரிவு காரணமாக அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க முடியாமல் அதிகாரிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்நிலையில் 2 வார காலத்திற்கு பிறகு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த இருவரது உடல்கள் புதன்கிழமை மீட்கப்பட்டன. மேலும் நிலச்சரிவில் காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT